×

2வது முறையாக தேர்வில் தோல்வி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

பொன்னேரி: மீஞ்சூரில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் இரண்டாவது முறையாக தோல்வி அடைந்த விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீஞ்சூர் பேரூராட்சி பக்தவச்சலம் தெரு லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் வெரோனிகா (18). இவர் இரண்டாவது முறையாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானநிலையில், 2வது முறையாக மாணவி தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த வெரோனிகா, நேற்று முன் தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீாசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post 2வது முறையாக தேர்வில் தோல்வி பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Meenjur ,Kumar ,Bhaktavachalam Street Lakshmipuram ,Meenjoor Municipality ,Veronica ,
× RELATED பழவேற்காடு கடற்கரையில் தேங்கியுள்ள...